உலகின் 29 நாடுகளில் உருமாறிய ‘லாம்ப்டா’ வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்த கொரோனா வைரஸ் காலத்துக்கு ஏற்ப தொடர்ந்து உருமாறி வருகிறது. இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்று உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்தது.
இந்த டெல்டா வைரஸால் தான் இரண்டாம் அலை தீவிரமாக இந்தியாவில் பரவியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. தற்போது இது மீண்டும் உருமாறி ‘டெல்டா பிளஸ்’ வைரஸாக உருவெடுத்துள்ளது. இது ஒரு புறம் இருக்க லாம்ப்டா என்ற புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உலகின் 29 அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது.
குறிப்பாக அர்ஜெண்டினா, சிலி போன்ற நாடுகளில் இந்த வகை வைரஸ் பரவியுள்ளது. தற்போது இந்த உருமாற்றம் அடைந்த லாம்ப்டா வகை கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் இந்த வைரஸ் மூலமாக பெரு நாட்டில் 81% கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்