உலகளவில் உள்ள அதிகபட்ச பயனர்கள் உபயோகிக்கும் ஒரு தகவல் தொடர்பு செயலி வாட்ஸ்அப். இந்த செயலி உலகின் எங்கோவொரு மூலையில் இருக்கக் கூடியவர்களையும் எளிதாக இணைக்க, தொடர்பு கொள்ள உதவுகிறது. இத்தகைய பயன்பாடுகளை உள்ளடக்கிய வாட்ஸ்அப் செயலி தனது பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து, வாட்ஸ்அப் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறும் போது, ‘வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட செய்தியை அடுத்த 15 நிமிடங்கள் வரைக்கும் திருத்திக் கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார். இதுவரை வாட்ஸ்அப் செயலியில் செய்தியை அனுப்பவும், அது அனுப்பப்பட்டவுடன் அழிக்கவும் மட்டுமே முடியும்.
நடிகர் சரத்பாபு திடீர் மறைவு…..,முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்….,
ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் அனுப்பிய செய்தியை அடுத்த 15 நிமிடத்திற்குள் மாற்றிக் கொள்ள முடியும். இந்த வசதிக்கான அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.