தமிழக மகளிருக்கான ரூ.1000 ஊக்கத்தொகை.., இதுதான் வழிமுறை.., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

0
தமிழக மகளிருக்கான ரூ.1000 ஊக்கத்தொகை.., இதுதான் வழிமுறை.., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
தமிழக மகளிருக்கான ரூ.1000 ஊக்கத்தொகை.., இதுதான் வழிமுறை.., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

தமிழ் நாட்டில் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி ரூ.1000 ஊக்கத்தொகைக்கு தகுதியான PHH, 35 கிலோ அரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் ரூ.1000 ஊக்கத்தொகை குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மகளிருக்கான ரூ.1000 மாத ஊக்கத்தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்பட உள்ளது. இந்த ஊக்கத்தொகையை ரேஷன் கடைகளில், மைக்ரோ ஏடிஎம் பொருத்தி அதன் மூலம் மகளிருக்கு வழங்கப்பட உள்ளதாம்.

அம்மாவான நடிகை சமந்தா.., அதிர்ச்சி மிகுந்த அப்டேட் லீக்!!

இந்த மைக்ரோ ஏடிஎம்மில் பயனாளிகளின் ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இதில் பெண்கள் ஊக்க தொகையை எடுக்கும் போது தங்களது கைரேகை அல்லது அரசு வழங்கும் டெபிட் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here