விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 700 எபிசோட்களை தாண்டி விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பாக்கியா குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் கோபியின் முடிவால் பாக்கியா குடும்பத்தினர் நிம்மதி இழந்துள்ளனர். மற்றொரு பக்கம் எழில் யாரை திருமணம் செய்து கொள்வார் என்ற கேள்வி குடும்பத்தார் மத்தியில் போய்க் கொண்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில் இந்த சீரியல் எழில் திருமணம் குறித்து ஒரு முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது பாட்டி ஈஸ்வரி வீட்டு சூழ்நிலையை காரணம் காட்டி எழில் மற்றும் வர்ஷினியின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். மேலும் இதற்கு பாக்கியா சம்மதிக்க மறுக்கிறார். ஆனால் அவரின் வாயை ஏதேதோ சொல்லி அடைத்து விடுவாராம்.
எண்ணத்துல தான் நம்மளோட Strength இருக்கு…, ரசிகர்களுக்கு அறிவுரை சொன்ன சம்மு!!
இந்த நிலையில் எழிலின் திருமணத்தில் ஏகப்பட்ட பிரச்சனை எழுந்து, கடைசியில் அமிர்தாவை திருமணம் செய்து கொள்வாரம். திருமணத்தை முடித்த கையோடு எழில் அமிர்தாவையும் அவரின் குழந்தையையும் தன் வீட்டிற்கு அழைத்து வருவாராம் . இப்படியான எதிர்பாராத திருப்பங்களுடன் இனி பாக்கியலட்சுமி சீரியல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.