தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வரபோகும் புதிய திட்டம் – டெல்லி முதல்வர் முன்னிலையில் தொடக்க விழா!!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வரபோகும் புதிய திட்டம் - டெல்லி முதல்வர் முன்னிலையில் தொடக்க விழா!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி அளிக்க வேண்டும் என அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் 41 அரசு பள்ளிகளில் ‘டில்லி மாடல்’ பள்ளி எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

புதிய திட்டம்:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசாங்கம் அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கான மாதாந்திர நிதி உதவி போன்றவை மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமைந்து வருகிறது. இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை சீரமைப்பு செய்யும் பணிகளை டெல்லி அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. மேலும் டெல்லிக்கு சுற்றுலா சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு பள்ளியை பார்வையிட்ட போது தமிழகத்திலும் இது போன்று பள்ளிகளில் சிறப்பம்சங்கள் வரப்படும் என்று அறிவித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் அடிப்படையில்டீ தமிழகத்தில் 41 பள்ளிகள் டெல்லியில் உள்ள மாடல் பள்ளிகளை போன்று மாற்றப்பட்டுள்ளது. அதில் 26 பள்ளிகள் தகைசால் பள்ளிகள் என்றும் 15 பள்ளிகள் மாதிரி பள்ளிகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற செப்டம்பர் 5ம் தேதி புதிதாக மாற்றப்பட்டுள்ள தமிழக பள்ளிகளை திறக்கும் துவக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார் அந்த மேடையில் புதுமை பெண் திட்டம் பெயர் சூட்டும் விழாவும் அரங்கேறும் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here