இந்தியாவின் தலைநகரான புது டெல்லி மக்கள் தொகை அதிகம் கொண்ட பெரிய மாநிலமாக திகழ்கிறது. மேலும் பல வருடங்களாக புது டெல்லியில் காற்று மாசுபாடு என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஒற்றை – இரட்டைப்படை எண் அடிப்படையில் வாகனங்கள் இயக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்திருந்தது. இப்படி இருக்கையில் தற்போது இது குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது தீபாவளிக்கு மறுநாள் 13 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 10th, 11th, 12th மாணவர்களை தவிர மற்ற அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாட்களில் ஒற்றை – இரட்டைப்படை அடிப்படையில் வாகனங்களை இயக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் புது டெல்லியின் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக ஒரு நிரந்தரமான நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என கொடுக்கப்பட்டிருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களே.., விரைவில் பயன்பாட்டுக்கு வரும் புதிய அம்சம்.., இனி கவலை வேண்டாம்!!!