தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து தகுதியான நுகர்வோருக்கு விரைவாக புதிய ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும் என்று உணவு வழங்கல் துறைக்கு மாநில உணவு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழ்நாட்டில் தற்போது வரை 2.13 கோடி ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. மாநிலம் முழுவதும் 39 மாவட்டங்களின் 314 வட்டங்களிலும் ரேஷன் அட்டைகளின் பயன்பாடு உள்ளது.பொதுமக்கள் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை நியாய விலை கடைகளில் பெற இந்த ரேஷன் அட்டைகள் உதவும். மேலும் மாநில அரசின் பொங்கல் பரிசு, நிவாரணத் தொகை போன்ற சலுகைகளை பெறுவதற்கு ரேஷன் அட்டைகள் அவசியம்.
தற்போது 2020 ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு கூட இன்னும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் புது ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த மக்கள் அரசின் சலுகைகைகளை பெற முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் இதுசமந்தமாக மாநில உணவு ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன.
இதை விசாரித்த மாநில உணவு ஆணையம், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைவாக ஆராய்ந்து தகுதியான நபர்களுக்கு விரைவாக புதிய ரேஷன் கார்டுகளை வழங்க உணவு வழங்கல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!