“தல” தோனி வளர்ந்த தாடியுடன் புதிய தோற்றத்தில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
கொரோனா பொது முடக்கம்:
கொரோனா நோய் பரவலால் மத்திய மற்றும் மாநில அரசுகள் நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தி உள்ளது. இதனால் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ள நிலை ஏற்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இப்படியான நிலையில், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு தங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவர். அந்த வகையில், “தல” தோனி தந்து புதிய தோற்றத்தை புகைப்படமாக வெளியிட்டு உள்ளார்.
“என்ஜாய்” செய்யும் தோனி குடும்பம்:
இந்த பொது முடக்கத்தில் தோனி தன் மனைவி மற்றும் மகளுடன் பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். அங்கு தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் தோனி அவ்வப்போது தன் மகளுடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவார்.
நாய்குட்டியுடன் விளையாடுவது, பைக் சவாரி செய்வது போன்ற புகைப்படங்களாக இருக்கும். தோனி ஒரு சிகை அலங்கார பிரியர். விதவிதமாக ஹேர்ஸ்டைல் உடன் அவர் காட்சி அளிப்பார். ஐபிஎல் தொடரின் போது தலையில் முடியை குறைத்துக் கொண்டு தாடியுள்ளாமல் இளம் வீரர் போன்று காட்சி அளித்தார்.
தற்போது, தாடியை வளர்த்து கொஞ்சம் முதிய வயது உடையவர் போல் காட்சி அளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
இவரது இந்த புதிய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து உள்ளனர். வயதானவர் போல் உள்ளார் அவர்.என்றும், கிரிக்கெட் போட்டியில் திரும்ப விளையாடும் மனநிலையில் “தல” தோனி இல்லை, என்று கூறி வருகின்றனர்.