லால் சிங் சத்தா எனும் புதிய படம் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் பிரைம் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸ்:
சினிமாவில் ஒரு படத்தை ரிலீஸ் செய்வதற்கு பல கலைஞர்கள் கடின உழைப்பை போடுகின்றனர். ஆனால் சில விரோதிகள் சட்டவிரோதமாக படத்தை திரையரங்குகளில் வீடியோ எடுத்து சில இணையதளங்களில் பதிவிட்டு சம்பாதித்து வருகின்றனர். அதன் வரிசையில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படமான அமீர்கான் நடிப்பில் வெளிவந்த ‘லால் சிங் சத்தா’ என்னும் இந்தி திரைப்படத்தை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்தது குறித்து வயாகாம் 18 என்ற நிறுவனம் பெங்களூரில் உள்ள பனஸ்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன் அடிப்படையில் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து கடந்த 12ம் தேதி இரண்டு நபரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து படங்களை பதிவேற்ற பயன்படுத்திய கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படம் முதல் நாள் வசூலால் படக்குழுவினர் வேதனையில் இருக்கும் நிலையில் இந்த சம்பவம் லால் சிங் சத்தா பட குழுவினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.