உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.300 கோடி மதிப்பில் புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்று கட்டப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
புதிய மைதானம்
இந்தியாவில் மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, ராஞ்சி உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இதில், மும்பை, சென்னை, டெல்லி போன்ற குறிப்பிட்ட மைதானங்களில் மட்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அகமதாபாத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட நரேந்திர மோடி மைதானம் உலகின் மிகப்பெரிய மைதானம் என்ற பெயரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தின் சிங்கிள் நாளை ரிலீஸ்….,விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்….,
இப்படி இருக்க, இந்தியாவில் கூடுதலாக ஒரு கிரிக்கெட் மைதானத்தை அமைக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 300 கோடி செலவாகும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.