லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்ப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு புது வகை கொரோனா உள்ளதா என்பதை தெரிவதற்காக அவர்களது மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வரும் என்று ஆய்வகம் அறிவித்துள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ்:
கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவிவருகிறது. தற்போது அனைத்து உலக நாடுகளும் கொரோனாவிற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் லண்டனில் அரங்கேறியது. அது என்னவென்றால் வைரஸ் என்றாலே உருமாறும் தன்மை பெற்றிருக்கும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதே போல் கொரோனா வைரஸும் தற்போது உருமாறி புது வகையான கொரோனா வைரஸ் லண்டனில் பரவிவருகிறது. இது தற்போதைய கொரோனா வைரஸை விட 70 சதவீதம் வீரியம் மிகுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உலக நாடுகள் அனைத்தும் லண்டனுக்கான தங்களது விமான சேவையை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டனில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் லண்டனில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 2300 பயணிகள் வந்துள்ளார்கள். இதில் 1437 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பது. அதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த 93 பேரை கண்டுபிடித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 13 பேரின் மாதிரிகள் புனே அனுப்பப்பட்டு அதற்கான முடிவுகளை புனே ஆய்வகம் தமிழக மற்றும் மத்திய அரசுக்கு அறிவித்துள்ளது. அதில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 2ம் கட்ட பரிசோதனையில் தான் இது புது வகை கொரோனா தொற்றா என்பது தெரியவரும். மேலும் இன்னும் 2 நாட்களில் அதற்கான முடிவுகள் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.