மத்திய மற்றும் மாநில அரசுகள் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்sகொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் “ஒரே நாடு ஒரே அடையாள அட்டை” என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அட்டையில் அந்தந்த மாணவர்கள் பற்றிய முழு விவரம் கொடுக்கப்பட்டிருக்கும்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் அதனை ஸ்கேன் செய்யும் போது மாணவர்கள் கல்வி பற்றி அனைத்து தகவல்களும் தகவல்களையும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு APAAR (Automated Permanent academic Account Registry) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அபார் அட்டை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் இந்த திட்டம் பள்ளி முடித்தவுடன் கல்லூரியில் சேர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
தீபாவளி எதிரொலி.., முட்டை விலை 530 காசுகளாக உயர்வு.., பண்ணையாளர்கள் அறிவிப்பு!!