தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா!!!

0

கொரோனா தொற்றை தடுக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசிகள் தான். இவை அந்த தொற்று நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றன. இந்நிலையில் தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று ஒரே நாளில் 69.25 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இது தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா ஒரு  புதிய சாதனையை படைத்து உள்ளது.

கொரோனா இரண்டாம் அலை, முதல் அலையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை தடுக்க அரசு பல்வேறு தடுப்பூசிகளை ஆராய்ச்சி செய்து மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் செலுத்தி வருகிறது. மேலும் முன்பு இந்த தடுப்பூசிகள்  பற்றிய தவறான வதந்திகள் மக்கள் மத்தியில் நிலவியது. இதனால் தடுப்பூசி செலுத்த மக்கள் முன்வராத நிலையில் தற்போது மக்களிடம் இதற்கான ஆர்வம் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து 6வது நாளாக 30 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். இதையடுத்து இன்று மாலை 5 மணி வரை நாடு முழுவதும் 69.25 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளனர். மேலும்  ஒரே நாளில் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டது இதுவே என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதிலும் குறிப்பாக மத்திய பிரதேசம்,கர்நாடகம் மற்றும் உத்திர பிரதேசம் மாநிலங்களில் அதிகமானோர் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு உள்ளனர்.

இன்று முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடும் பணி தொடங்கிய நிலையில், இந்த தடுப்பூசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் 42 லட்சத்துக்கும் அதிகமான  இந்தியர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனை மூலம் அதனை இந்தியா முறியடித்து உள்ளது

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here