விஜய் படத்தை பார்ப்பதும் கிடையாது..பேசுவதும் கிடையாது – நெப்போலியன் Open Talk..!

0

நடிகர் நெப்போலியன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் விஜயிடம் நான் பேசுவதில்லை என்றும் அவரது படங்களை பார்ப்பதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் நெப்போலியன்..!

நெப்போலியன் தமிழ் திரையுலகில் செல்லமாக மாவீரன் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பு மற்றும் தொழில் அதிபர் என இரு முகங்களை கொண்டுள்ளார். இவர் தற்போது மகனின் உடல் நலன் கருதி அமெரிக்காவில் குடியேறி விட்டார்.

இந்நிலையில் இப்படத்தின் விளம்பரத்துக்காக நடிகர் நெப்போலியன் ஜூம் செயலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போக்கிரி படத்தில் விஜய்யுடன் நடித்த நீங்கள் இப்போது அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

விஜய்யுடன் பேசுவதில்லை..!

நெப்போலியன் பிரபுதேவாவுக்காக தான் போக்கிரி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த படத்தின் போது எனக்கும் விஜய்க்கும் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிலிருந்து அவருடன் நான் பேசுவதுமில்லை. தொடர்ந்து அவருடைய படங்களை பார்ப்பதுமில்லை. அதனால் அவருடைய வளர்ச்சி இப்போது எப்படி இருக்கிறது என்பதெல்லாம் எனக்கு தெரியாது. போக்கிரி படத்தைப் பொறுத்தவரையில் நன்றாக வந்து படம் வெற்றியடைந்தது.

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த கதாபாத்திரத்தில் விஜய் நன்றாக நடித்தார். படம் நன்றாக வசூலித்தது. கடின உழைப்பைக் கொடுக்கிறார் அதனால் தானே வளர்ந்து வருகிறார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here