மத்திய அரசு ஊழியர்களுக்காக இந்திய அரசு எளிய மற்றும் பாதுகாப்பான குடும்ப ஓய்வூதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சந்தோசத்தில் துள்ளி குதிக்கும் பென்சன் வாங்கும் மக்கள்.
பென்சன்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் காரணமா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது . இதனால் இந்திய பொருளாதாரம் சரிந்து வந்தது. தற்போது நோய்த்தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் பொருளாதாரம் இனி மீண்டு வரும் என்ற நம்பிக்கை மெதுவாக அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்காக இந்திய அரசு எளிய மற்றும் பாதுகாப்பான குடும்ப ஓய்வூதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு முதல் கொரோனா நெருக்கடி காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன் வாங்குவோருக்கான அகவிலைப்படி, அகவிலை நிவாரணத்தை மத்திய அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பேச்சுவார்த்தைக்கு பின் ஜூலை 1ஆம் தேதி முதல் சம்பளம் உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் பென்சன் வாங்குவோரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.