வருகிற மே மாதம் 23ம் தேதி அன்று அதிகாலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சுமார் 12 மணி நேரம் NEFT சேவை இயங்காது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது அதற்கான காரணம் குறித்த விளக்கத்தையும் ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது.
பிரபல நடிகை சிம்ரனுக்கு இவளோ பெரிய மகனா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!
ரிசர்வ் வங்கி:
தற்போதைய காலத்தில் நேரடி பண பரிவர்த்தனையை விட ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. நாட்டில் அதிக அளவிலான மக்கள் பெரும்பாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆன்லைன் பரிவர்த்தனையில் NEFT & RTGS முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.இந்நிலையில் வருகிற மே மாதம் 23ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று NEFT சேவை இயங்காது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி வருகிற ஞாயிற்று கிழமை அதிகாலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை NEFT சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக தாற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.எனவே இந்த நேரங்களில் பரிவர்த்தனை நடைபெறாது என்றும் வாடிக்கையாளர்களின் தொகை அனைத்தும் அவர்களது கணக்கில் இருப்பு வைத்திருக்க படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப்பின்பு வழக்கம் போல் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.