விஜய் டிவியில் தற்போது வரை நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வரும் கோபிநாத் குறித்து இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தொகுப்பாளர் கோபிநாத்:
தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா ஷோ தான். இந்த ஷோவை ஆரம்பத்தில் இருந்து தொகுத்து வருபவர் தான் கோபிநாத். அவர் இந்த ஷோ மூலம் பட்டிதொட்டியெல்லாம் பேமஸ் ஆனார். குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய காமெடியான கருத்துக்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் அவருடைய எழுச்சிமிக்க கருத்துக்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து நிமிர்ந்து நில், திருநாள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நல்லதா நாலு விஷயம் என்ற தலைப்பில் ஒவ்வொரு நாளும் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கோபிநாத்தை குறித்து ஒரு முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரபல சன் டிவி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தொழிலதிபரான கலாநிதி மாறனை சன் டிவி அலுவலகத்தில் வைத்து விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றை கோபிநாத் தொகுத்து வழங்கியுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram