மருத்துவ பட்ட மேற்படிப்பு படிப்பான நீட் – எஸ்.எஸ். தேர்வு முறையில் கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கு தொடுப்பு :
மத்திய அரசால் நடத்தப்படக்கூடிய மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு இது வரை மாணவர்களுக்கு ஒரு புரியாத வினோதமாகவே இருந்து வருகிறது. இந்த தேர்வு தமிழகத்தில் பல மாணவர்களின் உயிரை காவு வாங்கியுள்ளது. இந்த நிலையில், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான நீட் – எஸ்.எஸ். தேர்வு முறையில் கடை நேரத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, இதற்கு முன்பு இருந்த 40 சதவீதம் கேள்விகள் பொது மருத்துவம் மற்றும் 60 சதவீதம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்ற முறை மாற்றப்பட்டு, 100% பொது மருத்துவப் பகுதியிலிருந்து கேள்விகள் அமைக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறை கடைசி நேரத்தில் மாற்றியமைக்கபட்டுள்ளதாக கூறி மருத்துவ மேற்படிப்பு படிக்கும் 41 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்