மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் – குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக காத்திருப்பு!

0

மத்திய அரசு நடத்த கூடிய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்க்கு எதிராக சட்டம் இயற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

புதிய சட்டம்:

தமிழக சட்டசபை கூட்டத்தொடர்  சில நாட்களுக்கு முன் தொடங்கி  நடந்து வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ்ன் மனைவி இறப்பிற்கு அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் சென்றனர்.  இதனை அடுத்து, இவர்கள் யாரும் நேற்று  சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இன்று  தொடங்கிய அவை முதல்வர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் நடந்தது.  இதில்,  துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.  இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் பதிலளித்தனர்.


இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்  திமுக-வின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வது. அதாவது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டது.  இதை பல முறை முதல்வர் ஸ்டாலின் அவர்களும் மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார்.  ஆனால், இது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.  தற்போது நீட் தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.

இதில், தற்போது இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது  குடியரசுத் தலைவரின்  ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.  அவர் ஒப்புதலுக்கு, பிறகு இது சட்டமாக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் விரைவில், குடியரசுத் தலைவர் அனுமதி பெற்று  அமலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here