நீட் தேர்வை எழுதிய மாணவி தற்கொலை – தமிழகத்தில் மீண்டும் சோகம்!!

0

நீட் தேர்வை எழுதி முடித்த அரியலூரை சேர்ந்த மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி தற்கொலை:

கடந்த இரு தினங்களுக்கு முன் நாடு முழுவதும் மத்திய அரசு நடத்த கூடிய மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது.  கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், இயற்பியல் பாடத்தில் மட்டுமே கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது பதவி வகித்து வரும் திமுக தலைமையிலான ஸ்டாலின் அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்து இருந்தனர். நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இந்த சட்டம் அமலாக்கப்பட்டால், தமிழகத்தில் முன்பு இருந்தது போலவே 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற  நிலை உருவாக இருந்தது.

இதில், எதிர்பாராத விதமாக, தேர்வு நடக்கும் முன்பே தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.  இவர் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெறாதவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த நிலையில், அதே போல் ஒரு சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது.

நீட் தேர்வை எழுதி முடித்த 12ம் வகுப்பு மாணவி கனிமொழி, தேர்வு முடிந்த நாள் முதல் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், அவர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here