கொரோனா நோய்பரவல் எதிரொலி – நீட் தேர்வு அதிரடி ஒத்திவைப்பு!!

0

ஆண்டு தோறும் மருத்துவ படிப்பிற்காக நுழைவு தேர்வாக நடத்தப்படும் நீட் தேர்வினை தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைத்துள்ளனர். இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

நீட் தேர்வு:

ஆண்டு தோறும் மருத்துவ கனவுகளை கொண்டு படித்து வரும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேர்வு தான் நீட் நுழைவு தேர்வு. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும். இந்த தேர்வு மிக கடினமாக இருக்கும் காரணத்தினால் மாணவர்கள் அனைவரும் மிக கடுமையாக இதற்காக தாயாராகி வருவார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டிற்கான நீட் நுழைவு தேர்வு கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் மிக பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டது. மேலும் இந்த ஆண்டுக்கான நீட் முதுநிலை தேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே அதற்காக தற்போது மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 நிர்வாகிகளுக்கு கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இந்நிலையில் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் இறுதி ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் லேசான அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். தற்போது இதன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்த தேர்வினை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க போவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கு அர்ப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here