மீண்டும் சாதனை படைக்க போகும் தங்கப் பையன்.., இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்.., யாரு சாமி நீ?

0
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக் தொடரில் முதன் முதலாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேலும் இந்த போட்டியில் சாதனை படைப்பாரா என பார்க்கலாம்.

நீரஜ் சோப்ரா, டயமண்ட் லீக் 2022!

டயமண்ட் லீக் தொடருக்கான தடைகள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கடந்த மாதம் நடைபெற்றது. ஆகஸ்டில் நடைபெற்ற லொசேன் டயமண்ட் லீக் தொடரில், இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு 89.94 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தை பிடித்து டயமண்ட் லீக் தொடருக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் டயமண்ட் லீக்கில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை பதிவு செய்தார். இவருக்கு போட்டியாக மற்ற நாடுகளில் இருந்து சில வீரர்கள் டயமண்ட் லீக் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ்ச், ஐரோப்பிய சாம்பியனான ஜூலியன் வெபரும், உலக சாம்பியனான கிரெனடா வின் ஆண்டர்சன் பீட்டர்ஸும் ஆகியோர் நீரஜ் ஜோப்ரா உடன் போட்டியிட உள்ளனர். இந்த வீரர்களுடன் போட்டியிட்டு டயமண்ட் லீக் கிராண்ட் பைனல் பட்டத்தை மட்டும் வென்று விட்டால், இந்த சாதனையை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை அடைவார். இந்நிலையில் இந்தியாவில் இருந்து மட்டும் டயமண்ட் லீக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய தடகள வீரர் இவர் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்கு ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here