புனே ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் உள்ள அரங்கத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பெயர் சூட்டப்பட உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அவரை நேரில் சந்தித்தும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பாராட்டு தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியும், நீரஜ் சோப்ராவும் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் மற்றொரு நிகழ்வு ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடக்கவுள்ளது.
அதாவது புனே ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் உள்ள அரங்கத்திற்கு இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பெயர் சூட்டப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெறும் பெயர் சுட்டும் விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்