தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளவர் நடிகை நயன்தாரா. இவருக்கு விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்த ஜோடி கிட்டத்தட்ட 6 வருடங்களாக காதலித்து கரம் பிடித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு நேராக தாய்லாந்துக்கு சென்ற இந்த தம்பதி ஜாலியாக தங்கள் ஹனிமுனை கொண்டாடினர்.
சமீபத்தில் கூட இவருக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இன்று (11-08-2022) இந்தியாவில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. நயன்தாரா தனது தங்கை கையால் ராக்கி கட்டிக் கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டாக்டர் ரினிதா ராஜன், இந்த பதிவை வெளியிட்டு எப்போதும் வலிமையான மனிதர்களில் ஒருவராக இவருடன் நட்பையும் சகோதரத்துவத்தையும், பரஸ்பரம் மரியாதையும் கொண்டிருக்கிறேன் என நயன்தாராவை குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த பதிவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram