கோலிவுட்டில் டாப் நாயகியான நயன்தாராவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியதாக தகவல் கிடைத்தது.
நயன்தாராவுக்கு வாந்தி:
கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். திருமணத்திற்கு பின், இருவரும் தங்கள் சினிமா வேலைகளில் மிகவும் பிஸியாகி விட்டனர். அடிக்கடி, இவர்கள் வெளியிடும் ரொமான்டிக் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, விக்னேஷ் சிவன் புதிதாக சமைத்துக் கொடுத்த உணவை சாப்பிட்டதால், நயன்தாராவுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது சிகிச்சைக்கு பின், நயன்தாரா நலமுடன் உள்ளார்.