நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிச்சிருச்சா?? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0

தமிழ் சினிமாத்துறையின் தற்போதைய காதல் ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

காதல் ஜோடி

தமிழ் சினிமா உலகில் பல காதல் ஜோடிகள் அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்றனர். சிலரது காதல் திருமணம் வரை சென்றுள்ளது. எடுத்துக்காட்டாக, பாக்யராஜ் – பூர்ணிமா, சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினி என்று பலர் உள்ளனர். அந்த வரிசையில் தற்போதைய ட்ரெண்டிங் காதலர்களாக இருப்பவர்கள் தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா. இவர்கள் முதன் முதலாக “நானும் ரவுடி தான்” என்ற திரைப்படத்தில் தான் பணிபுரிந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த திரைப்படத்தில் இருவரும் பணிபுரிந்தது முதல் இருவருக்குமான காதல் கிசுகிசுக்கள் எழுதப்பட்டன. இது குறித்து இருவரும் எந்த வித பதிலையும் கூறவில்லை. இவர்களது காதலை உறுதி செய்யும் வகையில் தான் இருவரது நடவடிக்கையும் இருந்தது. இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சென்றனர், பண்டிகைகள், பிறந்தநாள் விழாக்கள் என்று அனைத்தையும் ஒன்றாக கொண்டாடினர்.

இதனை அடுத்து தற்போது விக்னேஷ் சிவன் “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா போன்றோர் நடித்து வருகின்றனர். இப்படியான சூழலில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

தன் குழந்தை என்றே தெரியாமல் லட்சுமி பாசத்தில் மயங்கும் பாரதி – சௌந்தர்யாவின் எண்ணம் நிறைவேறுமா??

நயன்தாரா மோதிரம் அணிந்து இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் விக்னேஷ் சிவனே தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ‘விரலோடு விரல் கோர்த்து’ என்று பதிவிட்டுள்ளார். அதில் நயன்தாரா ஒரு மோதிரம் அணிந்துள்ளார். இதனால் இவர்களுக்கு நிச்சயம் நடந்து விட்டது என பலரும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here