எல்லாம் நயன்தாராவால் வந்த வினை – பிரம்மாண்ட வாய்ப்பை நழுவ விட்ட நடிகர் சிம்பு!!

0
எல்லாம் நயன்தாராவால் வந்த வினை - பிரம்மாண்ட வாய்ப்பை நழுவ விட்ட நடிகர் சிம்பு!!

இயக்குனர் மணிரத்னம், இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் கமிட்டாகி இருந்த சிம்பு, அதில் நடிக்காமல் போனதன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிக்காமல் போன சிம்பு :

சரித்திர நாவலான பொன்னியின் செல்வன், படத்தை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்களாக இயக்கி வருகிறார். முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. விக்ரம், பிரபு, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை இதற்கு முன்பு எடுக்க திட்டமிட்டு இருந்த மணிரத்தினம், மகேஷ் பாபு, விஜய் உள்ளிட்ட பலரை நடிக்க வைக்க திட்டமிட்டார். ஆனால், எதுவுமே கை கூடவில்லை. அதே வகையில், இந்தப் படத்தில் நடிக்க சிம்பு மற்றும் நயன்தாராவிடமும் பேசப்பட்டது. ஆனால், சிம்பு நடித்தால் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என நயன்தாரா மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, இந்த படத்தில் இருந்து சிம்பு விலகினார். அதேபோல் நயன்தாராவும் இந்த படத்தில் நடிக்கவில்லை. இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள்,  நயன்தாராவால் சிம்பு மிகப் பிரமாண்டமான ஒரு வாய்ப்பு இழந்துவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here