தமிழ் சினிமாவின், நட்சத்திர ஜோடிகளான நயன் விக்கி திருமணம் திருப்பதியில் இருந்து, சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதன் பின்னணி குறித்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
பகீர் பின்னணி :
தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளான நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும், வருகிற ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இவர்கள் திருமணம் முதலில் திருப்பதியில் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் 150 பேருக்கு மேல் கலந்து கொள்ள, தேவஸ்தானம் அனுமதி மறுத்ததால் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இது போக மற்றொரு காரணமும் வெளியாகி உள்ளது. அதாவது, அவர்கள் திருமணத்தை பிரபல ஓடிடி சேனல் ஒன்றில் ஒளிபரப்பு உள்ளதாகவும் இதற்காக, இந்த ஜோடிகள் பெரும் தொகையை தனியார் சேனலிடம் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, இந்த திருமண நிகழ்வை கலர்புல்லாக காட்ட, திருமணத்தை மகாபலிபுரத்துக்கு மாற்றிவிட்டதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்