நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான ஆடை அணிந்து தான் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று ஊழியர்களுக்கு யூனியன் வங்கி நிபந்தனை விதித்துள்ளது.
நவராத்திரி ஸ்பெஷல்:
நவராத்திரியின் ஒன்பது நாள் கொண்டாட்டங்கள் கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கி வருகிற 15ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தங்கள் வங்கியை சார்ந்த ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை யூனியன் வங்கி வெளியிட்டுள்ளது.
அதாவது, மஞ்சள் நிற ஆடை தொடங்கி பர்ப்பில் நிற ஆடை என பட்டியல் ஒன்றை தயாரித்து ஒன்பது நாட்களும் இந்த நிற ஆடையை மட்டும் தான் அணிந்து வர வேண்டும் எனவும், அதை பின்பற்றாதோர்க்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இது தனி மனித உரிமை மீறல் என ஊழியர்கள் மத்தியில் போராட்டம் வெடித்ததை அடுத்து இந்த முடிவு வாபஸ் வாங்கப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்