சரத்குமார் நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான நாட்டாமை படத்தின் ஷூட்டிங் போது நடந்த முக்கிய உண்மைகளை, கே எஸ் ரவிக்குமார் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் தகவல் :
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், விஜயகுமார், குஷ்பூ, பொன்னம்பலம், சங்கவி, மீனா ஆகியோர் நடிப்பில் உருவான ஹிட் திரைப்படம் நாட்டாமை. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய இடத்தை பிடித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில், நாட்டாமை படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த முக்கியமான ஒரு சுவாரஸ்ய உண்மையை, ரவிக்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.அதாவது நாட்டாமை ஷூட்டிங்கில் இருந்தபோது, ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்தது. எதற்கென்றால், அவர் படத்தை அவருடன் அமர்ந்து preview show பார்ப்பதற்காக தான்.
ஷூட்டிங்கை பாதியிலேயே விட்டுவிட்டு அப்படியே ஓடிவிட்டேன். அப்படித்தான், எனக்கும் ரஜினிக்கும் அன்னோன்யம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் நடித்த பாட்ஷா படத்தில் கூட, ஒரு சில குறைகளை நான் சொன்னேன். வில்லனுக்கு மட்டும் வயசாகுது ஹீரோக்கு ஏன் ஆகல என்று அந்தப் படத்தை பற்றி நான் கேள்வி கேட்டேன் என, சில நெகிழ்ச்சியான உண்மைகளை தெரிவித்துள்ளார்.