தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப் பதக்கங்களை அள்ளிய ஒலிம்பிக் நாயகி!!

0
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப் பதக்கங்களை அள்ளிய ஒலிம்பிக் நாயகி!!
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப் பதக்கங்களை அள்ளிய ஒலிம்பிக் நாயகி!!

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் 65 வது சீசன், போபாலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்றனர். இதில், பெண்களுக்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஹரியானவை சேர்ந்த ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற மனு பாக்கர், புஷ்பாஞ்சலியை எதிர்கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில், 33-27 என்ற புள்ளிக் கணக்கில் ஒலிம்பிக் வீராங்கனையான மனு பாக்கர் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து, ஜூனியர் சாம்பியன் பட்டத்திற்காக, தனது சொந்த மாநிலத்தை சேர்ந்த விபூதி பாட்டியாவை, மனு பாக்கர் எதிர்கொண்டார். இதில், 32-24 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த பிரிவிலும் தங்கப் பதக்கத்தை வென்றார் மனு பாக்கர்.

IND vs BAN: ரோஹித், கே எல் ராகுலுக்கான சோதனையா?? இந்திய முன்னாள் வீரர் விடுத்த எச்சரிக்கை!!

இவர் ஏற்கனவே, இந்த சாம்பியன்ஷிப்பில் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில், 2 தங்கம் பதக்கத்தை வென்றிருந்தார். இதன் மூலம், இந்த சாம்பியன்ஷிப்பில் 4 தங்கப்பதக்கங்களை அள்ளி குவித்துள்ளார். இதர போட்டிகளில், மகளிர் பிரிவில் விபூதி வெண்கலமும், ஜூனியர் பிரிவில் மேகனா சாதுலா வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here