கால்பந்து போட்டிக்கான நேஷனல் லீக் ஆட்டத்தில் டென்மார்க் மற்றும் நெதர்லாந்து அணிகள் அதிரடியாக விளையாடி வெற்றியை அடைந்துள்ளனர்.
நேஷனல் லீக்
உலக அளவில் உள்ள கால்பந்து அணிகள் பங்கேற்கும் நேஷனல் லீக் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி வெற்றி பெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த போட்டியில் காஸ்பர் டோல்பெர்க் மற்றும் ஆண்ட்ரியாஸ் ஸ்கோவ் ஓல்சன் ஆகியோர் கோல் அடித்து டென்மார்க் அணியின் வெற்றிக்கு உதவினர். இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதியது.
கோலியின் இடத்தை பறித்த ரோஹித், ஆனாலும் கிடைக்காத முதலிடம்., அப்போ யாரு தான் பர்ஸ்ட்??
இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் அதிரடியாக விளையாடி நெதர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தினர். இந்த போட்டிகளை தொடர்ந்து நேஷனல் லீக் தொடருக்கான அடுத்த லீக் ஆட்டத்தில் ஹங்கேரி மற்றும் இத்தாலி அணிகள் மோத உள்ளனர்.