
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்தி கொள்வதற்காக 23 கோடியில் ஜெட்டிப்பாலத்தின் கட்டுமான பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன் நேற்று இதன் பணிகளை பார்வையிட்டுள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒன்றிய மீன்வள துறை அமைச்சகத்தின் மூலம் 38,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசின் மீன்வளத் துறை வளர்ச்சிக்கு மட்டும் 1800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுபோக இலங்கையில் பிடித்து வைத்திருக்கும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திய மாநிலங்களுக்குள் எந்த எல்லையில் வேண்டுமானாலும் மீன் பிடித்து கொள்ள தேசிய மீனவர் அடையாள அட்டை வழங்கும் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். இதுபோக கடலுக்குள் மீன் பிடிக்கும் போது மீனவர்களுக்கு எழும் பாதிப்பில் இருந்து அவர்கள் உயிரை காப்பாற்ற ஏர் ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ளார்.