நாடு முழுவதும் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவில்லை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் அகில இந்திய கல்வி குழு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் புதிய கல்விக்கொள்கையில் உள்ள நலத்திட்டங்கள் விவரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
உதயநிதியிடம் கைவரிசையை காட்டாத வடிவேலு.., இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா?
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,”முன்னதாக புத்தக அறிவை மட்டுமே மாணவர்களுக்கு கொடுத்து வந்தோம். இனி அந்த நிலையை மாற்றவே புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்துள்ளோம். நான் ஆசிரியராக இருந்ததில்லை. சமூக சூழ்நிலைகளை படிக்கும் மாணவனாக இருக்கிறேன். உலக தலைவர்களில் சிலரின் ஆசிரியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை அறிகையில் நான் பெருமிதம் கொள்கிறேன்.” என பேசியுள்ளார்.