டி 20 கிரிக்கெட் தொடர் வெற்றி குறித்து தமிழகத்தை சேர்ந்த இந்திய பந்துவீச்சாளர் யார்க்கர் மன்னன் தங்கராஜ் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தங்கராஜ் நடராஜன்
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு, இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முதல் டி 20 போட்டியில் 3விக்கெட்டுகளை எடுத்த நடராஜன், பின் இரண்டாவது டி20 போட்டியில் 4 ஓவர் பந்து வீசி, 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜனுக்கு இந்திய உலக கோப்பை அணியில் விளையாட இடம் கிடைக்குமா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு!!
டி20 தொடர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளவை, “என் நாட்டிற்கான முதல் தொடர் வெற்றி, இது எனக்கு மிகவும் மறக்கமுடியாதது, ஸ்பெஷலானது” என்று பதிவிட்டுள்ளார்.