ஆதித்யா – எல் 1 ஏவுகணையை அனுப்பி சூரியனின் வளிமண்டலங்களில் ஆராய்ச்சி செய்வதற்கான திட்டம் அடுத்த ஆண்டில் தொடங்கப்படும் என இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக விண்வெளி ஆராய்ச்சியில் பல அசாத்திய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தியாவின் சாதனை திட்டமாக கருதப்படும் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள்ள இஸ்ரோ ஆதித்யா – எல் 1 ஏவுகணையை விண்ணில் செலுத்த உள்ளது. தற்போது ஆதித்யா எல்- 1 விண்கலம் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் விண்ணில் ஏவப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் வாழும் பூமியில் இருந்து சுமார் பல லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் சூரியன் அமைந்துள்ளது. அதில் எல்-1 எனப்படும் சுற்றுப்பாதையில் இந்த ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்படும். அங்கிருந்து சூரியனின் வெளிப்புற பகுதி குறித்து இஸ்ரோ ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வால் சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்த பல்வேறு தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்பது உண்மை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்