தமிழகம் வந்தடைந்தார் மோடி – தேர்தல் பிரச்சார வேலைகள் தீவிரம்!!

0

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக நாட்டின் பிரதமர் மோடி இன்று தமிழகம், கேரளா மற்றும் புதுவை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

நரேந்திர மோடி:

தமிழகத்தில் இன்னும் 6 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு நடுவே தேர்தல் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த முறையும் தமிழகத்தில் பாஜக கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதன்படி பாஜகவிற்கு 20 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 1 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தற்போது நாட்டின் பிரதமர் மோடி தமிழகம் வந்தடைந்தார். தற்போது முதலாவதாக அவர் கேரளா செல்லவுள்ளார். அதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். கேரளாவில் பாலக்காட்டில் பிரச்சார வேலைகளை முடித்து விட்டு பின்பு இன்று பிற்பகல் போல் தமிழகத்திற்கு வந்து தாராபுரத்தில் அதிமுக மற்றும் பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் work from home-ஆ?? சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இங்கு பிரச்சாரத்தை முடித்த பின்பு இன்று மாலை 4 மணி அளவில் புதுவையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். அவர் அந்த கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். மேலும் இன்று புதுவைக்கு பிரதமர் வருகை தரவுள்ளதால் அங்கு தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here