திருப்பூரில் பிரதமர் மோடி பிரச்சாரம் – உற்சாகத்தில் தொண்டர்கள்!!

0

தேர்தல் பிரச்சார பணிகளுக்காக தற்போது தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்போது திருப்பூரில் உள்ள தாராபுரத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழகம்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் தேர்தல் பிரச்சார பணிகளுக்காக தற்போது நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கேரளா மற்றும் புதுவை ஆகிய பகுதிகளுக்கு பிரச்சார வேலைகளில் ஈடுபடுவதற்கு இன்று வருகை தந்துள்ளார். அதன்படி முதற்கட்டமாக பிரதமர் மோடி இன்று காலை கேரளாவில் உள்ள பாலக்காட்டிற்கு சென்று தனது பணியை முடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்பு தற்போது திருப்பூர் தாராபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். இவர்களுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஏப்ரல் 1 முதல் வங்கிகளின் காசோலை செல்லாது – மக்களே உஷார்!!

தற்போது பிரதமர் மோடி தனது கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார். பிரதமர், முதல்வர் மற்றும் துணை முதல்வரை காண தொண்டர்கள் உற்சாகமாக வருகை தந்துள்ளனர். மேலும் கூட்டத்தில் தொண்டர்கள் வெற்றிவேல் என்றும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா என்றும் தொண்டர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here