கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்த புதுவைக்கு வரும் மோடி – பாதுகாப்பு பணிகள் தீவிரம்!!

0

நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவைக்கு வரவுள்ளார். இவர் வருகிற 30ம் தேதி அன்று புதுவைக்கு வரவிருக்கிறார். தற்போது இதன் எதிரொலியாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தவுள்ளது.

புதுவை:

தமிழகம், புதுவை உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் மிக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். மேலும் பறக்கும் படையினரும் மிக தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் பிரதமர் தேர்தல் பணிக்காக புதுச்சேரிக்கு வரவுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆரம்பமே இப்படியா?? அதிமுக, மநீம கட்சி வேட்பு மனுக்கள் நிறுத்தி வைப்பு!!

அவர் வருகிற மார்ச் மாதம் 30ம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார். இங்கு வந்த அவர், கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவுள்ளார். அதன்படி வருகிற 30ம் தேதி அன்று மாலை 4 மணி அளவில் நடக்கும் பிரச்சாரத்தில் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்யவுள்ளார். ஏ.எப்.டி மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோர் பங்குபெறுகின்றனர். இதனை மாநில பாஜக அறிவித்தது. பிரதமரின் வருகைக்காக அங்கு பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here