‘ரேஷன் கடைகளில் 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்’ – பிரதமர் மோடி உத்தரவு!!

0

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை குறைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலவச தானியம்:

நாட்டில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டும் பல தரப்பு மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்களை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த வருடம் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த நிலையில் நாட்டில் பல்வேறு மானியங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டும் பாதிப்பு மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருவதால் கடந்த வருடம் போல் இந்த வருடமும் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சுமார் 80 கோடி மக்கள் பயனடையும் வகையில் ரூ.26,000 கோடி செலவில் 5 கிலோ உணவு தானியங்களை வருகிற மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு – இன்று மாலை வெளியீடு!!

இந்த நிவாரணம் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் வரும். மேலும் இந்த இலவச தானிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழை எளியோர், புலம் பெயர்ந்த தொழிலாளிகள் ஆகியோர் பயனடையும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here