பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி விசாரணையில் இறங்கினர். இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ரியா மற்றும் அவரது கூட்டாளிகள் என 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பாலிவுட் திரையுலகம் குறித்த பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருகிறது.
#WATCH Maharashtra: Actor Deepika Padukone arrived at Narcotics Control Bureau's (NCB) Special Investigation Team (SIT) office in Mumbai, earlier today.
She has been summoned by NCB to join the investigation of a drug case, related to #SushantSinghRajputDeathCase. pic.twitter.com/yWSihP5CG0
— ANI (@ANI) September 26, 2020
ரியா அளித்த தகவல்கள் மற்றும் வாட்ஸ்ஆப் உரையாடல்களை அடிப்படையாக வைத்து நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சம்மன் அனுப்பியது. இந்நிலையில் நேற்று மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஆஜரானார். அவரிடம் 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று காலை 9.45 மணிக்கு தீபிகா படுகோன் மதிய வாக்கில் சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் அடுத்தடுத்து நேரில் வந்தனர்.
#WATCH: Actor Sara Ali Khan reaches Narcotics Control Bureau zonal office in Mumbai.
She has been summoned by NCB to join the investigation of a drug case, related to #SushantSinghRajput's death case. pic.twitter.com/QTu5CFSBrr
— ANI (@ANI) September 26, 2020
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் விசாரணை வளையத்தில் உள்ள அவரது மேனேஜர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட திரையுலகில் 2 நடிகைகள் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.