
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலரும் சென்னையில் வேலைக்காக தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தொடர் விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊருக்கு சென்று வருவதால், சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கி வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவில் to தாம்பரம் வரை சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த ரயில் நவ.5 (நாளை), 12, 19, 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 04.35 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக நவ.6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என அறிவித்துள்ளனர்.