இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இப்படம் வரும் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட நாகசைதன்யா சில வார்த்தைகள் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்த படத்தை பற்றி நான் பேசுவதற்கு முன் நம் அனைவரையும் விட்டு பிரிந்து சென்ற நடிகர் மனோபாலா sir என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒருவர், அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் நான் வேண்டிக்கொள்கிறேன் என சொல்லி தனது பேச்சை தொடங்கினார்.
இதன் பிறகு தனக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் வெங்கட்டிற்கு தனது நன்றியை தெரிவித்தார். மேலும் இப்படம் ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல் entertainment க்கும் பஞ்சமில்லாத வகையில் இதன் கதைக்களம் அமைந்துள்ளது என கூறியுள்ளார். இதோடு இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளது, இப்படத்தின் பிளஸ் பாய்ண்டாக அமைந்துள்ளது என கூறி, இப்படம் நிச்சயம் மக்களால் வரவேற்க படும் என உறுதியளித்துள்ளார்.