சினிமாவில் வலம் வந்த முக்கிய ஜோடிகளாக இருந்தவர்கள் சமந்தா நாக சைதன்யா. சென்ற ஆண்டு இவர்கள் தங்கள் பிரிவை அறிவித்து தற்போது தனி தனியாக தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு பக்கம் சமந்தா பாலிவுட், ஹாலிவுட் என பிசியாகி விட்டார்.
மறுபுறம் நாக சைதன்யா அமீர் கான் போன்ற முக்கிய பிரபலங்களுடன் படங்களில் கமிட் ஆகி வருகிறார். இவர் நடித்துள்ள லால் சிங் சத்தா படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக கலந்து கொண்டு வருகிறார் நாக சைதன்யா. இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டியில் தனது இடது கையில் வரையப்பட்டுள்ள டாட்டூ குறித்து விளக்கமளித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது அந்த டாட்டூ முன்னாள் மனைவி சமந்தாவுடன் நடைபெற்ற திருமணத்தின் நினைவாக வரையப்பட்டது என கூறியுள்ளார். மேலும் விவாகரத்துக்கு பிறகும் கூட அந்த டாட்டூவை அழிக்க தோன்றவில்லை என்றும் நாக சைதன்யா தெரிவித்துள்ளார். இவர் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.