தமிழ் சினிமாவில் சாதாரண நடிகையாக தொடங்கி தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரும் நாகஅர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கடந்த ஆண்டு விவகாரத்தை அறிவித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்நிலையில் சமீப காலமாக நாக சைதன்யா இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் மேலும் சினிமாவில் இல்லாத ஒரு மணப்பெண்ணை தன் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க போவதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது.
அதாவது “என் மௌனத்தை அறியாமை என நினைக்காதீர்கள், அமைதியாக இருந்தால் ஏற்றுக்கொண்டேன் என எண்ணாதீர்கள்.. என் அன்பை பலவீனம் என நினைக்காதீர்கள்.. அன்புக்கும் ஒரு முடிவு காலம் இருக்கலாம்” என குறிப்பிட்டு இருக்கிறார். ஏன் திடீரென்று சமந்தா இவ்வாறு ட்விட் போட்டார். ஒருவேளை நாக சைதன்யாவின் இரண்டாம் திருமணம் இதற்கு காரணமாக இருக்குமோ என நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்