நாட்டில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது என்று பாஜகவின் நட்டா கடுமையாக சாடியுள்ளார். மேலும் இதுகுறித்து சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா தொற்று:
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்வதாக பாஜகவின் நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் சோனியாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தொடக்கத்தில் ஊரடங்கு விதிக்க எதிர்ப்பு தெரிவித்து தற்போது ஊரடங்கு விதிக்க அறிவுறுத்தி வருகிறது காங்கிரஸ்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதை தவிர வேறு ஒன்றும் செய்வது கிடையாது. கேரளாவில் மிக பெரிய பேரணியை திரட்டி கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகை செய்தீர்கள். போராட்டங்கள் பலவற்றை தாமாக தூண்டிவிட்டு தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறீர்கள். கொரோனா பரவலுக்கு மிக முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தான். அவர்கள் முகக்கவசம் அணிவதில்லை மற்றும் சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
அரசியல் காரணங்களுக்காக நிலைப்பாட்டை மாற்றுவதை தற்போது நிறுத்தவேண்டும். இந்த கடிதத்தை நான் உங்களுக்கு மிகுந்த வேதனையோடு எழுதுகிறேன். கொரோனா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. காங்கிரஸினால் தவறான அரசியலை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை, என்று கடுமையாக அந்த கடிதத்தில் விமர்சித்துள்ளார் நட்டா.