விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியல் புதிய உச்சத்தை தொட்டு பாரதி கண்ணம்மாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உருவெடுத்துள்ளது.
நாம் இருவர் நமக்கிருவர்
நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் ஐஸ்வர்யா முத்தரசு செய்யும் திருட்டு வேலைகளை எல்லாம் கண்டுபிடித்து அதனை வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்ல போவதாக மிரட்டி வந்தார். இதனால் ஐஸ்வர்யாவை அடித்து கோமா ஸ்டேஜ் வரைக்கும் கொண்டு சென்று விட்டார்.
எப்படியோ ஐஸ்வர்யா கண்முழிக்க முதல் வேலையாக ஐஸ்வர்யாவை குளிக்கும் போது எடுத்த விடியோவை காட்டுகிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் உள்ள அனைவரிடமும் தெரியாமல் விழுந்து விட்டதாக சொல்கிறார். ஆனால் மாயன் இதனை நம்பவில்லை.
ஐஸ்வர்யா சரண்யாவிடம் முத்தரசு திருடியதை பற்றி சொல்ல அவர் போலீசிற்கு கால் செய்து சொல்லி விடுகிறார். வந்து பார்த்தால் ஐஸ்வர்யா அடிவாங்கிய தழும்பை பார்த்து போலீசார் சந்தேகமடைகின்றனர். ஐஸ்வர்யா முத்தரசு தான் தன்னை அடித்தது என்ற உண்மையை சொல்லி விடுகிறார்.
இப்படி பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் நாம் இருவர் நமக்கிருவர் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கிலும் எகிறியுள்ளது. தற்போது விஜய் டிவியில் டாப் 5 சீரியலில் மூன்றாவது சீரியலாக இடம் பெற்றுள்ளது.
முதல் இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இருக்க, இரண்டாவது இடத்தில் பாரதி கண்ணம்மா இடம் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் நூலிழை வித்தியாசத்தில் நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் இடம் பெற்றுள்ளது.