போலீசிடம் ஆதாரத்துடன் சிக்கிக்கொண்ட மாயன் – முத்தரசு என்ன ஆனார்?? பல திருப்பங்களுடன் நாம் இருவர் நமக்கிருவர்!!

0

நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தான் மாயன் ஆதாரத்துடன் மாட்டிக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாம் இருவர் நமக்கிருவர்

இந்த சீரியலில் தொடர்ந்து பல ட்விஸ்டுகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் கத்தி, சரண்யா, மாயம், மகா என அனைவர் மீதும் சந்தேகம் அதிகமாகிறது. இன்றைய எபிசோடில் கூட காயத்ரிக்கு கத்தி மீது அதிக சந்தேகம் ஏற்படுகிறது.

ஏனெனில் அவர் ஆறுதல் சொல்கின்றேன் என்ற பெயரில் என்னென்னவோ சொல்ல அவர் மீது சந்தேகத்தை அதிகரிக்கிறது. மேலும் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவின் தாலி வேறு காணாமல் போக அதற்கும் சரண்யா அவன் உயிரோடவே இல்லை அப்பறம் எதற்கு தாலி என்று வார்த்தையை விடுகிறார்.

இது ஒட்டுமொத்த குடும்பத்தையும் சந்தேகப்பட வைக்கிறது. இப்படி எல்லாம் ஒவ்வொருவரின் மீதும் அனைவரும் சந்தேகத்தில் இருக்க தற்போது மாயன் போலீசில் சரணடைந்த புகைப்படம் வைராகி வருகிறது.

அப்படி பார்த்தால் மாயன் தான் கொலை செய்தாரா?? ஆனால் அவரே ஒரு குழப்பத்தில் தானே இருந்தார். வேறு யாரையாவது காப்பாற்ற பழியை தன் மேல் போட்டுக்கொண்டாரா?? என்றும் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here