முத்தரசனை கொன்றது யார்?? மாயனா?? மகாவா?? கோர்ட்டில் நடக்கும் தீவிர விசாரணை! வைரலாகும் ஷூட்டிங் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் கூடிய விரைவில் மர்ம நபர் பிடிபடும் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாம் இருவர் நமக்கிருவர்

நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா தனது வாழ்க்கையை நினைத்து அதிக வேதனையுடன் இருந்து வருகிறார். எப்படியோ கைக்கு அந்த மொபைல் வந்தவுடன் தான் நிம்மதியாக உள்ளார்.

ஆனாலும் எதோ ஒரு பயம் அவரை துரத்திக்கொண்டே தான் உள்ளது. ஐஸ்வர்யாவை நினைத்து அனைவரும் வேதனையில் இருக்க மறுபக்கம் முத்தரசனை கொன்றது யாராக இருக்கும் என்ற கேள்வியும் அனைவரின் மனதிலும் உள்ளது.

மேலும் நாம் இருவர் நமக்கிருவர் சீசன் 1 இல் மாயனுக்கு மச்சானாக நடித்தவர் இந்த 2வது சீசனில் களமிறங்கியுள்ளார். அதுவும் முத்தரசன் வழக்கை கண்டுபிடிக்கும் போலீசாக களமிறங்கியுள்ளார். இதில் யார் அந்த மர்ம நபர் என்றே தெரியவில்லை. அதுவும் மகாவாக இருக்குமோ என்ற சந்தேகமும் அனைவரிடமும் வந்துள்ளது.

ஆனால் ஐஸ்வர்யா மீதும் ஒரு சிறு சந்தேகம் உள்ளது. மாயன் யோசிப்பது, சந்தகப்படுவது எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது அவராக இருக்க வாய்ப்பில்லை. மேலும் வடிவின் அண்ணன் பாதுகாப்பில் தான் முத்தரசன் இருந்துள்ளார்.

அப்படி என்றால் அவர் கொல்ல வாய்ப்பிருக்கலாம் என்றும் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த மர்ம நபரை கண்டுபிடிக்கும் வழக்கு கோர்ட்டிற்கு வருகிறது. மாயன் மற்றும் போலீஸ் கூண்டில் நிற்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தால் இந்த சீரியலுக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here