புதுவையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தற்போது முதல்வராக பதவி ஏற்றுள்ளார் என்.ஆர்.ரங்கசாமி. தற்போது இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
புதுவை முதல்வர்:
புதுவை பகுதிகளில் கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. பின்பு நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே மாதம் 2ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் புதுவை பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியிட்டு தேர்தலில் களம் கண்டனர். அதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 மற்றும் பாஜக 6 தொகுதியில் வெற்றி பெற்று புதுவையில் ஆட்சியை கைபிடித்து.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதற்கு முன்னர் புதுவையில் கடந்த முதல்வர் ஆட்சி கவிழ்ந்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது தேர்தலின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் புதுவையில் மக்கள் ஆட்சி மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. புதுச்சேரியின் புதிய முதல்வராக 4வது முறை என்.ஆர்.ரங்கசாமி பதவி ஏற்றுள்ளார். அதன்படி இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையில் ரங்கசாமி பதவி ஏற்றுள்ளார்.
தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் புதுச்சேரியின் 20வது முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு புதுவை ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதுவையில் முதல்வர் பதவியை ஏற்ற ரங்கசாமிக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.